சதைகளைக் கண்டு
மோகித்து சதைகளை நுகர்ந்து கொன்று
சதைகளாய் அலைந்து மடியும்
மனச் சதை
சதை மனம் மடியும் காலம்
அண்மிக்குமா
இது சதைகளின் பொழுது
எங்கேனும் மனிதன் இருந்தால் சொல்
நிலவிடம்
பிறை வளரும்