தீட்ட எளிதானவை மலர்கள்
கடினம் இலைகள்
சப்பானியக் கவிதை
மனிதர்களுக்கு மலர்கள்தான் தேவை.இலைகள் கிளைகள் மரம் வேர், நிலம், நீர், காற்று, தேவையில்லை.உள்ளம் சுருங்கி பொருளுக்கு அடிமையான மனம் வேரென்ன செய்யும்.விதையிலிருந்து மலர்கள் மட்டும் பூத்தால்போதும். நுகர்வுவெறியேறிய மனிதமனம் மலர்களைத்தான் நேசிக்கும்.ஆதலினால் தீட்ட எளிதானவை மலர்கள்கடினம் இலைகள்.