Friday, November 16, 2012

வெற்றுக்கிளை தழையும் மர நிழலில் ஒளிரும் சுடர்



கால நதியில் நானோர்
மலரும் நீர்க்குமிழ்

அந்தரம் பாயும் மீன்
தீராத வெறுமையின்
வசீகரம் நிரம்பிய
வெற்றுப் படகு
கேவல் அடங்காத
பின்னிரவில் எழும்பும் நீராவி
அடர் சலனம் பூத்த மோனச்சுழி
வற்றாத கூழாங்கற்களின் இசையில்
தன்னை இழைக்கும் மணல்.