தீட்ட எளிதானவை மலர்கள்
கடினம் இலைகள்
சப்பானியக் கவிதை
மனிதர்களுக்கு மலர்கள்தான் தேவை.இலைகள் கிளைகள் மரம் வேர், நிலம், நீர், காற்று, தேவையில்லை.உள்ளம் சுருங்கி பொருளுக்கு அடிமையான மனம் வேரென்ன செய்யும்.விதையிலிருந்து மலர்கள் மட்டும் பூத்தால்போதும். நுகர்வுவெறியேறிய மனிதமனம் மலர்களைத்தான் நேசிக்கும்.ஆதலினால் தீட்ட எளிதானவை மலர்கள்கடினம் இலைகள்.
Saturday, November 28, 2009
Friday, August 28, 2009
Saturday, August 8, 2009
சதைகளின் காலம்
சதைகளைக் கண்டு
மோகித்து சதைகளை நுகர்ந்து கொன்று
சதைகளாய் அலைந்து மடியும்
மனச் சதை
சதை மனம் மடியும் காலம்
அண்மிக்குமா
இது சதைகளின் பொழுது
எங்கேனும் மனிதன் இருந்தால் சொல்
நிலவிடம்
பிறை வளரும்
Friday, July 3, 2009
தமிழ் மலை
நீர் வழிப்படூஉம் புனை போல..
அறவிலை வணிகன் ஆய் அலன்..
செம்புலப் பெயல் நீர் ..
உலகுபுகத் திறந்த வாயில்.. வியத்தலும் இலமெ...
கல்லைப் பிசைந்து கனியாக்கி நின்றானை..
அறவிலை வணிகன் ஆய் அலன்..
செம்புலப் பெயல் நீர் ..
உலகுபுகத் திறந்த வாயில்.. வியத்தலும் இலமெ...
கல்லைப் பிசைந்து கனியாக்கி நின்றானை..
Wednesday, June 24, 2009
அகாலன் கூற்று
உடல்விசும்புத் திரையொடுங்கும்
நீர் மலையுடல் மிதக்கும் நிணக்கடல்
கூழுண்ணும் பேய்கள்
மலைகளை அடுக்கின.
சருகுகளை நட்டு வளர்க்கும்
ஒரு பித்தன் சொன்னான்
அல்காலமென்று
Wednesday, June 17, 2009
கூகி வா தியாங்கோ
சமீபத்தில் படித்த புத்தகம் கூகி வா தியாங்கோவின் அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்
மிகச்சிறந்த நூல் .
காலனிய மனநிலை எவ்வாறு நம்முள்ளும் இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது
காலனிய நுண் அரசியல் வடிவங்களையும் அதற்கான மாற்றுகளையும் முன்வைக்கிறார் .
மிகச்சிறந்த நூல் .
காலனிய மனநிலை எவ்வாறு நம்முள்ளும் இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது
காலனிய நுண் அரசியல் வடிவங்களையும் அதற்கான மாற்றுகளையும் முன்வைக்கிறார் .
என்னை மறந்தேன்
மவுனத்தின் நேசன்
தனிமையின் காதலன்
நிராசைகளின் குப்பைத்தொட்டி
அதியனின் கரங்களில்
தவழும் குழந்தை
அவ்வையின் கதை சொல்லி
சருகுகளை மீட்டும்
இசைஞன்
.......... யாழ் அதியன்
தனிமையின் காதலன்
நிராசைகளின் குப்பைத்தொட்டி
அதியனின் கரங்களில்
தவழும் குழந்தை
அவ்வையின் கதை சொல்லி
சருகுகளை மீட்டும்
இசைஞன்
.......... யாழ் அதியன்
Subscribe to:
Posts (Atom)