பைத்தியமாயிருப்பதே
ஃபேஷனாகி விட்டதால்
உங்களைப்போல் உடையணிந்துகொள்ளவும்
முயற்சிக்கிறேன்
இப்பொழுதெல்லாம்.
Thursday, March 18, 2010
Monday, March 8, 2010
தன்னை இழக்கும் ருசி
குரூரத்தின் வன்ம விதைகளை
கருணை பொங்க
என்னுடல் வெளியில்
ஊடகனாய் விதைத்தாய்.
என்
கையறு வாழ்வில் உனக்கென்ன
கவலை.
நாம் சந்திக்கும் குறியிடங்களை
நீதான் தீர்மானிக்கிறாய்
எப்போதும்.
அது யந்திரோபாயமென்பதை
உணர்ந்ததில்லை யான்.
குறிப்புக்கு;
பெருமைதான் யெமக்கு அதில்.
ஒருபோதும் அல்லகுறியாவதில்லை
உனக்கு .
கருணை பொங்க
என்னுடல் வெளியில்
ஊடகனாய் விதைத்தாய்.
என்
கையறு வாழ்வில் உனக்கென்ன
கவலை.
நாம் சந்திக்கும் குறியிடங்களை
நீதான் தீர்மானிக்கிறாய்
எப்போதும்.
அது யந்திரோபாயமென்பதை
உணர்ந்ததில்லை யான்.
குறிப்புக்கு;
பெருமைதான் யெமக்கு அதில்.
ஒருபோதும் அல்லகுறியாவதில்லை
உனக்கு .
Monday, March 1, 2010
வதைவனம்
உன் பசப்புகளுக்கு
எனது கடல்
கட்டுண்டு மயங்கியது
ஒரு நிழலின்
அந்திப்பொழுது என்றறிந்து கொண்டது
மசமசக்கும் அறிகுறிகள்
புன்முறுவலாய் மாறுமா என்ன
Saturday, November 28, 2009
கவிதையும் பிதற்றலும்
தீட்ட எளிதானவை மலர்கள்
கடினம் இலைகள்
சப்பானியக் கவிதை
மனிதர்களுக்கு மலர்கள்தான் தேவை.இலைகள் கிளைகள் மரம் வேர், நிலம், நீர், காற்று, தேவையில்லை.உள்ளம் சுருங்கி பொருளுக்கு அடிமையான மனம் வேரென்ன செய்யும்.விதையிலிருந்து மலர்கள் மட்டும் பூத்தால்போதும். நுகர்வுவெறியேறிய மனிதமனம் மலர்களைத்தான் நேசிக்கும்.ஆதலினால் தீட்ட எளிதானவை மலர்கள்கடினம் இலைகள்.
கடினம் இலைகள்
சப்பானியக் கவிதை
மனிதர்களுக்கு மலர்கள்தான் தேவை.இலைகள் கிளைகள் மரம் வேர், நிலம், நீர், காற்று, தேவையில்லை.உள்ளம் சுருங்கி பொருளுக்கு அடிமையான மனம் வேரென்ன செய்யும்.விதையிலிருந்து மலர்கள் மட்டும் பூத்தால்போதும். நுகர்வுவெறியேறிய மனிதமனம் மலர்களைத்தான் நேசிக்கும்.ஆதலினால் தீட்ட எளிதானவை மலர்கள்கடினம் இலைகள்.
Friday, August 28, 2009
Saturday, August 8, 2009
சதைகளின் காலம்
சதைகளைக் கண்டு
மோகித்து சதைகளை நுகர்ந்து கொன்று
சதைகளாய் அலைந்து மடியும்
மனச் சதை
சதை மனம் மடியும் காலம்
அண்மிக்குமா
இது சதைகளின் பொழுது
எங்கேனும் மனிதன் இருந்தால் சொல்
நிலவிடம்
பிறை வளரும்
Friday, July 3, 2009
தமிழ் மலை
நீர் வழிப்படூஉம் புனை போல..
அறவிலை வணிகன் ஆய் அலன்..
செம்புலப் பெயல் நீர் ..
உலகுபுகத் திறந்த வாயில்.. வியத்தலும் இலமெ...
கல்லைப் பிசைந்து கனியாக்கி நின்றானை..
அறவிலை வணிகன் ஆய் அலன்..
செம்புலப் பெயல் நீர் ..
உலகுபுகத் திறந்த வாயில்.. வியத்தலும் இலமெ...
கல்லைப் பிசைந்து கனியாக்கி நின்றானை..
Subscribe to:
Posts (Atom)