வெம்மை கமழும்
கற்பாறை யாதொரு
சலனமற்று கரைந்து போகும்
வைகறையில் கேட்ட
ஆனைச்சாத்தன் இசையில்
எப்போதும் போல்
பங்குனியில்
மின்னலெனப் படரும்
மரங்கள்
அரும்பும் தளிர்களை
ஒளித்துவைப்பதில்லை.
குறிப்பு: ஆனைச்சாத்தன் : கரிக்குருவி
முருகு: அச்சுருத்தும் தெய்வம்.அணங்கு, சூர், சூர் அரமகளிர் போன்றன இப்படிப்பட்டவை.
முருகு பால் அடையாளமில்லாதெய்வம். கருப்பும் இப்படியே. இத்தெய்வங்கள் மலை உச்சிகளிலும் சுனைகளிலும், மரப் பொந்துகளிலும் வாழ்பவை. இவைகள் இளையோரைப் பிடித்துக் கொள்ளும். முருகு பிடித்தால் வெறியாட்டு நடத்துவர். இந்த முருகே,முருகு+அன்= முருகனாக மாறியது என்று ஆய்வாளர் சிலர் கூறுவர். இவை இயற்கைத் தெய்வங்கள்.மேலும் காண்க சங்கக் கவிதைகளில்..