Friday, June 18, 2010

உதிரும் காலம் முருகாய் மலரும்

வெம்மை கமழும்
கற்பாறை யாதொரு
சலனமற்று கரைந்து போகும்
வைகறையில் கேட்ட‌
ஆனைச்சாத்தன் இசையில்
எப்போதும் போல்
பங்குனியில்
மின்னலெனப் படரும்
மரங்கள்
அரும்பும் தளிர்களை
ஒளித்துவைப்பதில்லை.

குறிப்பு: ஆனைச்சாத்தன்‍‍ ‍‍‍‍: கரிக்குருவி
முருகு: அச்சுருத்தும் தெய்வம்.அணங்கு, சூர், சூர் அரமகளிர் போன்றன இப்படிப்பட்டவை.
முருகு பால் அடையாளமில்லாதெய்வம். கருப்பும் இப்படியே. இத்தெய்வங்கள் மலை உச்சிகளிலும் சுனைகளிலும், மரப் பொந்துகளிலும் வாழ்பவை. இவைகள் இளையோரைப் பிடித்துக் கொள்ளும். முருகு பிடித்தால் வெறியாட்டு நடத்துவர். இந்த முருகே,முருகு+அன்= முருகனாக மாறியது என்று ஆய்வாளர் சிலர் கூறுவர். இவை இயற்கைத் தெய்வங்கள்.மேலும் காண்க சங்கக் கவிதைகளில்..

1 comment:

குடிசைவாசி said...

கவிதைக்குள் செல்வதற்கான திறப்பு இறுதி இரு வரிகளில் இருப்பதாக உணர்கிறேன். ஆனாலும் என் சிற்றறிவைக் கொண்டு உம் மாயக் கவிதைக்குள் தொடர்ந்து பயணிக்க முடியாமல் பழக்கமற்ற இருட்டறையில் நுழையும் புதியவனாய் கதவருகிலேயே நின்றுவிட்டேன். என் கைபிடித்து அழைத்துச் செல்வாய் கவியே!