Friday, November 4, 2011
சுடர் குமைவு
வெறுமையின் உக்கிரம் கூடி
நகரும் ஒரு மரத்தின் பயணம்
என்றைக்கும் போல்
நிழலாக மட்டும் மீந்துபோவதில்லை
நகரும் ஒரு மரத்தின் பயணம்
என்றைக்கும் போல்
நிழலாக மட்டும் மீந்துபோவதில்லை
Sunday, October 16, 2011
யாழ்முறிப் பண்
சுவடுகளற்ற பொழுதொன்றில்
நித்தியத்தைப் பருகும்
தருணமதில்
அந்தரத்தில் நீந்த யத்தனிக்கும்
உன்மத்தப் பறவை
நித்தியத்தைப் பருகும்
தருணமதில்
அந்தரத்தில் நீந்த யத்தனிக்கும்
உன்மத்தப் பறவை
Thursday, June 2, 2011
கொழுத்த உன்
என் பிணந்தின்று
கொழுத்த உன்
மேதமையின் சாகசம்
விசும்பென நீள
வெயில் பாயா
அந்த வேம்பின் மடியில்
தின்ற மண்ணின் வாசம்
இன்னும் போகவில்லை
என்பதை மீதமிருக்கும்
மரணிக்கவியலா நமது காகமொன்று
தன் ஆழி நாவால்
அறிவிக்க எத்தனிக்கிறது.
சிறுவர்கள் இன்னும் விளையாடுகிறார்கள்
குளிர்கமழ் வேம்படியில் .
கொழுத்த உன்
மேதமையின் சாகசம்
விசும்பென நீள
வெயில் பாயா
அந்த வேம்பின் மடியில்
தின்ற மண்ணின் வாசம்
இன்னும் போகவில்லை
என்பதை மீதமிருக்கும்
மரணிக்கவியலா நமது காகமொன்று
தன் ஆழி நாவால்
அறிவிக்க எத்தனிக்கிறது.
சிறுவர்கள் இன்னும் விளையாடுகிறார்கள்
குளிர்கமழ் வேம்படியில் .
Monday, May 23, 2011
உன் சேய்மை
ஒரு சுடரைப் போல உன் சேய்மை
விரைந்து கவியும் ஒரு துளி இருள்
என் உனது உன்மத்த மரணம்
உன் நிலம் ஒரு ஒருதான் ...
விரைந்து கவியும் ஒரு துளி இருள்
என் உனது உன்மத்த மரணம்
உன் நிலம் ஒரு ஒருதான் ...
Thursday, September 16, 2010
சுடரும் கணங்களைத் தவிர ஏதுமில்லை
அது வெறுமை கமழும்
சிலைஎன்றான் ஒரு உன்மத்தன்
அப்படித்தான் போலும்
சுயமழிந்த பிரதியை
வேறென்னவேன்பது
எப்போதும் கதவில்
வாழும்
உன் உயிர் .
சிலைஎன்றான் ஒரு உன்மத்தன்
அப்படித்தான் போலும்
சுயமழிந்த பிரதியை
வேறென்னவேன்பது
எப்போதும் கதவில்
வாழும்
உன் உயிர் .
Friday, June 18, 2010
உதிரும் காலம் முருகாய் மலரும்
வெம்மை கமழும்
கற்பாறை யாதொரு
சலனமற்று கரைந்து போகும்
வைகறையில் கேட்ட
ஆனைச்சாத்தன் இசையில்
எப்போதும் போல்
பங்குனியில்
மின்னலெனப் படரும்
மரங்கள்
அரும்பும் தளிர்களை
ஒளித்துவைப்பதில்லை.
குறிப்பு: ஆனைச்சாத்தன் : கரிக்குருவி
முருகு: அச்சுருத்தும் தெய்வம்.அணங்கு, சூர், சூர் அரமகளிர் போன்றன இப்படிப்பட்டவை.
முருகு பால் அடையாளமில்லாதெய்வம். கருப்பும் இப்படியே. இத்தெய்வங்கள் மலை உச்சிகளிலும் சுனைகளிலும், மரப் பொந்துகளிலும் வாழ்பவை. இவைகள் இளையோரைப் பிடித்துக் கொள்ளும். முருகு பிடித்தால் வெறியாட்டு நடத்துவர். இந்த முருகே,முருகு+அன்= முருகனாக மாறியது என்று ஆய்வாளர் சிலர் கூறுவர். இவை இயற்கைத் தெய்வங்கள்.மேலும் காண்க சங்கக் கவிதைகளில்..
கற்பாறை யாதொரு
சலனமற்று கரைந்து போகும்
வைகறையில் கேட்ட
ஆனைச்சாத்தன் இசையில்
எப்போதும் போல்
பங்குனியில்
மின்னலெனப் படரும்
மரங்கள்
அரும்பும் தளிர்களை
ஒளித்துவைப்பதில்லை.
குறிப்பு: ஆனைச்சாத்தன் : கரிக்குருவி
முருகு: அச்சுருத்தும் தெய்வம்.அணங்கு, சூர், சூர் அரமகளிர் போன்றன இப்படிப்பட்டவை.
முருகு பால் அடையாளமில்லாதெய்வம். கருப்பும் இப்படியே. இத்தெய்வங்கள் மலை உச்சிகளிலும் சுனைகளிலும், மரப் பொந்துகளிலும் வாழ்பவை. இவைகள் இளையோரைப் பிடித்துக் கொள்ளும். முருகு பிடித்தால் வெறியாட்டு நடத்துவர். இந்த முருகே,முருகு+அன்= முருகனாக மாறியது என்று ஆய்வாளர் சிலர் கூறுவர். இவை இயற்கைத் தெய்வங்கள்.மேலும் காண்க சங்கக் கவிதைகளில்..
Subscribe to:
Posts (Atom)