கோவை ஞானி என எல்லோரும் அழைப்பர். ஞானி ஐயாவால் ஜெயமோகன் உள்ளிட்ட பலரும் ஆக்கம் பெற்றுள்ளனர்.
2001முதல் அறிவேன். அவரிடம் சென்றிராவிட்டால் குப்பையாய்த்தான் போயிருப்பேன் என்பதை அவரின்
ஆளுமையும் ஆக்கமும் கண்டு உணர்ந்தேன். மனித விடுதலை, உயிர் விடுதலை என்பதை மையமாகக்
கொண்டு இடையறாது இயங்கும் தமிழின் பேறு அவர். தமிழ் அடையாள அழிப்பு வேலைகளைச்
செய்துகொண்டு தமிழின் காவலராய் தடியெடுத்தவர்களெல்லாம் தண்டல் காரன்போல் தங்களை
அறிவித்துக் கொள்ளும் நிழல்களுக்கிடையே ஆரவாரம் இன்றி செயல்படும் தமிழ் இயக்கம் அவர். நூல்கள்
மணக்கும் சோலையாய் அவர் ஆய்வறை. நான்கற்றவை சொல்லி மாளாது....
ஞானியின் நூல்கள்:
1. இந்திய வாழ்கையும் மார்க்சியமும் (1976)
2. மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு (1979)
3. மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் (1978)
4. தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் ( 1994)
5. எண்பதுகளில் தமிழ் நாவல்கள் (1994)
6. படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம் (1994)
7. கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை (1996)
8. தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம் (1999) காவ்யா வெளியீடு , சென்னை
9. நானும் என் தமிழும் (1997)
10. தமிழன் வாழ்வும் வரலாறும் (1999)
11. தமிழில் படைப்பியக்கம் (1999) காவ்யா வெளியீடு , சென்னை
12. மார்க்சியத்துக்கு அழிவில்லை (2001)
13. மறு வாசிப்பில் தமிழ் இலக்கியம் (2001) காவ்யா வெளியீடு , சென்னை
14. எதிர் எதிர் கோணங்களில் (2002) காவ்யா வெளியீடு , சென்னை
15. மார்க்சிய அழகியல் (2002) காவ்யா வெளியீடு , சென்னை
16. கவிதையிலிருந்து மெய்யியலுக்கு (2002)
17. தமிழ், தமிழர், தமிழ் இயக்கம் (2003)
18. தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் (2004)
19. வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் (2004) காவ்யா வெளியீடு , சென்னை
20. தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் (2004) காவ்யா வெளியீடு , சென்னை
21. தமிழன்பன் படைப்பும் பார்வையும் (2005)
22. நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் (2006) காவ்யா வெளியீடு , சென்னை
23. வள்ளுவரின் அறவியலும் அழகியலும் (2007)
24. தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் (2008) காவ்யா வெளியீடு , சென்னை
25. நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் (2009) அபுதாபி தமிழ்ச் சங்கம்
முதலாக 27க்கும் மேற்பட்டவை.
பெருந்தொகுப்புகள் :
1. மார்க்சியம் பெரியாரியம் (2006) காவ்யா வெளியீடு , சென்னை
2. தமிழியம் தமிழ்த்தேசியம் (2007) காவ்யா வெளியீடு , சென்னை
3. தமிழ்க்கவிதை (2007) காவ்யா வெளியீடு , சென்னை
4. தமிழ் நாவல் (2008) காவ்யா வெளியீடு , சென்னை
கவிதை நூல்கள்: 2; தொகுப்பு நூல்கள்: தமிழ்த்தேசியம் பேருரைகள் முதல் நிகழ்க் கட்டுரைகள் வரை
13க்கும் மேற்பட்டவை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டியை நடத்துகிறார்.
2009 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருதைப் பெறவுள்ளார்.
தமிழ் நேயம் இதழை மிகுந்த சிரமத்திற்கிடையிலும் கொண்டு வருகிறார். தமிழ் எவ்வளவு இடையூறுகள்
வரினும் தன்னைத் தக்கவத்துத் தழைத்துக் கொள்ளும் என்பதற்கு ஞானி ஐயா போன்றவர்களே சான்று.
Wednesday, April 28, 2010
இன்று சித்திரை நிறைநிலா நாள்... தொல்காப்பியரின் பிறந்த நாள் ...
நிலவின் பாலொளியமுது பருகாதார் துயருடையோர் தான் எனும் படி பொங்கும் பேரெழில்.
இன்றைய நாளை தொல்காப்பியரின் பிறந்த நாள் என தமிழறிஞர்கள் முடிவுசெய்து விழா எடுக்கின்றனர். நல் முயற்சி.
பொய்யர்களுக்கும் புராணக்கதை மாந்தர்களுக்கும் வீண் பிறந்த நாள் கொண்டாடும் சூழலில் உலக அறிஞர்கள்
என்றும் வியக்கும் படி தமிழ் இலக்கண ,இலக்கிய, சமூக, வாழ்வியல் வளத்தை வெளிப்படுத்திய் முதல்
அறிஞர் இவரே என மொழி நூலார் வியந்து கூறுவர். அவருக்கு பிறந்த நாள் காணும் செயல் மிகச்சிறப்பு.
தமிழ் தழைக்கும் வழி தொல்காப்பியரின் நெறியில் நல் ஆய்வுகள் தேவை.
இன்றைய நாளை தொல்காப்பியரின் பிறந்த நாள் என தமிழறிஞர்கள் முடிவுசெய்து விழா எடுக்கின்றனர். நல் முயற்சி.
பொய்யர்களுக்கும் புராணக்கதை மாந்தர்களுக்கும் வீண் பிறந்த நாள் கொண்டாடும் சூழலில் உலக அறிஞர்கள்
என்றும் வியக்கும் படி தமிழ் இலக்கண ,இலக்கிய, சமூக, வாழ்வியல் வளத்தை வெளிப்படுத்திய் முதல்
அறிஞர் இவரே என மொழி நூலார் வியந்து கூறுவர். அவருக்கு பிறந்த நாள் காணும் செயல் மிகச்சிறப்பு.
தமிழ் தழைக்கும் வழி தொல்காப்பியரின் நெறியில் நல் ஆய்வுகள் தேவை.
Friday, April 23, 2010
அண்மையில் வாசித்த கீற்றுகளில் சில
1. சங்கக் கவிதைகள், நவீன கவிதைகள் புரியவில்லை என்கிற நண்பர்களுக்கு
...ஒரு நூலின் தன்மையை அறிதற்குரிய நன்முறை அந்நூலை நேரில் படித்தலேயாகும். இத்தகைய
கட்டுரைகளெல்லாம் நூல்களைப் படித்தற்கு உதவும் தோற்றுவாய்களேயாகும்.
இக்கட்டுரைகளையும், காப்பியங்களின் சாரமாக உரை நடையில் எழுதப்படும் சிறிய நூல்களையும்
படித்த மாத்திரத்தில் மூல நூல்களையே ஆராய்ந்து தேர்ந்துவிட்டதாக மயங்குதல் கூடாது.
எல்லாவற்றையும் எளிதாகவும் விரைவாகவும் அடைந்துவிடவேண்டுமென்ற விருப்பு இக்காலத்தில்
எங்கும் பரவி இருக்கின்றது . வானவூர்தியிலேறி அமர்ந்து மணிக்கு நூறு இரு நூறு கல் விரைவில்
பல்லாயிரங்கல்களுக்கப்பாலுள்ள வேறிடங்களுக்குச் செல்லலாம். இது விஞ்ஞானம் அளித்த நலன்.
ஆனால் வானவூர்தி வேகத்தில் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களையும் இருபத்து ஏழு இயல்களையும்
படித்து முடித்திட ஒல்லுமோ? நம் முன்னோர் எங்ஙனம் முயன்று முறையாக நூல்களைக் கற்றனரோ அங்ஙனமேதான்
நாமும் கற்றல் வேண்டும். ஆதலின் தமிழ்ப்பற்றுகொண்டு அதனைக் கற்கப் புகும் இளந்தமிழன்பர்கள் சிறிய
உரைநடை நூல்களையும் கட்டுரைகளையும் படித்தனராயின் அதன்பின்னர் முதல் நூல்களையும் அவற்றின்
உரைநடைகளோடு படித்தல் வேண்டும்.
...பத்துப் பாட்டுச் சொற்பொழிவுகள் (1952 கழகப் பதிப்பு நன்றி ) எனும் நூலில் மதுரைக் காஞ்சி எனும்
கட்டுரையிலிருந்து.. பக்கம் .௧௭௪
ஆசிரியர்: வித்துவான். ஆ. ஜெபரத்னம் , எம். ஏ.,
...ஒரு நூலின் தன்மையை அறிதற்குரிய நன்முறை அந்நூலை நேரில் படித்தலேயாகும். இத்தகைய
கட்டுரைகளெல்லாம் நூல்களைப் படித்தற்கு உதவும் தோற்றுவாய்களேயாகும்.
இக்கட்டுரைகளையும், காப்பியங்களின் சாரமாக உரை நடையில் எழுதப்படும் சிறிய நூல்களையும்
படித்த மாத்திரத்தில் மூல நூல்களையே ஆராய்ந்து தேர்ந்துவிட்டதாக மயங்குதல் கூடாது.
எல்லாவற்றையும் எளிதாகவும் விரைவாகவும் அடைந்துவிடவேண்டுமென்ற விருப்பு இக்காலத்தில்
எங்கும் பரவி இருக்கின்றது . வானவூர்தியிலேறி அமர்ந்து மணிக்கு நூறு இரு நூறு கல் விரைவில்
பல்லாயிரங்கல்களுக்கப்பாலுள்ள வேறிடங்களுக்குச் செல்லலாம். இது விஞ்ஞானம் அளித்த நலன்.
ஆனால் வானவூர்தி வேகத்தில் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களையும் இருபத்து ஏழு இயல்களையும்
படித்து முடித்திட ஒல்லுமோ? நம் முன்னோர் எங்ஙனம் முயன்று முறையாக நூல்களைக் கற்றனரோ அங்ஙனமேதான்
நாமும் கற்றல் வேண்டும். ஆதலின் தமிழ்ப்பற்றுகொண்டு அதனைக் கற்கப் புகும் இளந்தமிழன்பர்கள் சிறிய
உரைநடை நூல்களையும் கட்டுரைகளையும் படித்தனராயின் அதன்பின்னர் முதல் நூல்களையும் அவற்றின்
உரைநடைகளோடு படித்தல் வேண்டும்.
...பத்துப் பாட்டுச் சொற்பொழிவுகள் (1952 கழகப் பதிப்பு நன்றி ) எனும் நூலில் மதுரைக் காஞ்சி எனும்
கட்டுரையிலிருந்து.. பக்கம் .௧௭௪
ஆசிரியர்: வித்துவான். ஆ. ஜெபரத்னம் , எம். ஏ.,
Sunday, April 18, 2010
அண்மையில் வாசித்தவை
கவிதையியல்( க.பூரணச்சந்திரன்)
தெலூஸ் கத்தாரி ( எம்.ஜி. சுரேஷ்)
லெக்கான் (எம்.ஜி. சுரேஷ்)
நம் தந்தையரைக் கொள்வதெப்படி ( மாலதி மைத்ரி )
நகுலன் கவிதைகள்
நகுலன் கவிதைகள் சில
தேடித்திரிந்ததைக் கண்டது
நாடி வந்தவனைக்
கண்டபின்தான்
நான்
எனக்கு
யாருமில்லை
நான் கூட..
இல்லாமல் இருப்பது
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்
தெலூஸ் கத்தாரி ( எம்.ஜி. சுரேஷ்)
லெக்கான் (எம்.ஜி. சுரேஷ்)
நம் தந்தையரைக் கொள்வதெப்படி ( மாலதி மைத்ரி )
நகுலன் கவிதைகள்
நகுலன் கவிதைகள் சில
தேடித்திரிந்ததைக் கண்டது
நாடி வந்தவனைக்
கண்டபின்தான்
நான்
எனக்கு
யாருமில்லை
நான் கூட..
இல்லாமல் இருப்பது
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்
Thursday, April 15, 2010
அசரீரி உரு
..மரணதினும் கொடிது
மரண வாழ்க்கை .
பறவையின் கோதலில்
கழன்று அந்தரத்தில் தவழும்
ஒரு இறகைப் போல
காலத்தில் கரைய எத்துனை நாள்
மலர்ந்துகொண்டிருப்பது .
கனிகளின் காலம் எப்போதும் அந்திதான்.
பித்தம் பூக்கும்
உதய நாழிகை
உப்புக்கடல்தான்
மரண வாழ்க்கை .
பறவையின் கோதலில்
கழன்று அந்தரத்தில் தவழும்
ஒரு இறகைப் போல
காலத்தில் கரைய எத்துனை நாள்
மலர்ந்துகொண்டிருப்பது .
கனிகளின் காலம் எப்போதும் அந்திதான்.
பித்தம் பூக்கும்
உதய நாழிகை
உப்புக்கடல்தான்
Subscribe to:
Posts (Atom)