கோவை ஞானி என எல்லோரும் அழைப்பர். ஞானி ஐயாவால் ஜெயமோகன் உள்ளிட்ட பலரும் ஆக்கம் பெற்றுள்ளனர்.
2001முதல் அறிவேன். அவரிடம் சென்றிராவிட்டால் குப்பையாய்த்தான் போயிருப்பேன் என்பதை அவரின்
ஆளுமையும் ஆக்கமும் கண்டு உணர்ந்தேன். மனித விடுதலை, உயிர் விடுதலை என்பதை மையமாகக்
கொண்டு இடையறாது இயங்கும் தமிழின் பேறு அவர். தமிழ் அடையாள அழிப்பு வேலைகளைச்
செய்துகொண்டு தமிழின் காவலராய் தடியெடுத்தவர்களெல்லாம் தண்டல் காரன்போல் தங்களை
அறிவித்துக் கொள்ளும் நிழல்களுக்கிடையே ஆரவாரம் இன்றி செயல்படும் தமிழ் இயக்கம் அவர். நூல்கள்
மணக்கும் சோலையாய் அவர் ஆய்வறை. நான்கற்றவை சொல்லி மாளாது....
ஞானியின் நூல்கள்:
1. இந்திய வாழ்கையும் மார்க்சியமும் (1976)
2. மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு (1979)
3. மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் (1978)
4. தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் ( 1994)
5. எண்பதுகளில் தமிழ் நாவல்கள் (1994)
6. படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம் (1994)
7. கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை (1996)
8. தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம் (1999) காவ்யா வெளியீடு , சென்னை
9. நானும் என் தமிழும் (1997)
10. தமிழன் வாழ்வும் வரலாறும் (1999)
11. தமிழில் படைப்பியக்கம் (1999) காவ்யா வெளியீடு , சென்னை
12. மார்க்சியத்துக்கு அழிவில்லை (2001)
13. மறு வாசிப்பில் தமிழ் இலக்கியம் (2001) காவ்யா வெளியீடு , சென்னை
14. எதிர் எதிர் கோணங்களில் (2002) காவ்யா வெளியீடு , சென்னை
15. மார்க்சிய அழகியல் (2002) காவ்யா வெளியீடு , சென்னை
16. கவிதையிலிருந்து மெய்யியலுக்கு (2002)
17. தமிழ், தமிழர், தமிழ் இயக்கம் (2003)
18. தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் (2004)
19. வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் (2004) காவ்யா வெளியீடு , சென்னை
20. தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் (2004) காவ்யா வெளியீடு , சென்னை
21. தமிழன்பன் படைப்பும் பார்வையும் (2005)
22. நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் (2006) காவ்யா வெளியீடு , சென்னை
23. வள்ளுவரின் அறவியலும் அழகியலும் (2007)
24. தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் (2008) காவ்யா வெளியீடு , சென்னை
25. நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் (2009) அபுதாபி தமிழ்ச் சங்கம்
முதலாக 27க்கும் மேற்பட்டவை.
பெருந்தொகுப்புகள் :
1. மார்க்சியம் பெரியாரியம் (2006) காவ்யா வெளியீடு , சென்னை
2. தமிழியம் தமிழ்த்தேசியம் (2007) காவ்யா வெளியீடு , சென்னை
3. தமிழ்க்கவிதை (2007) காவ்யா வெளியீடு , சென்னை
4. தமிழ் நாவல் (2008) காவ்யா வெளியீடு , சென்னை
கவிதை நூல்கள்: 2; தொகுப்பு நூல்கள்: தமிழ்த்தேசியம் பேருரைகள் முதல் நிகழ்க் கட்டுரைகள் வரை
13க்கும் மேற்பட்டவை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டியை நடத்துகிறார்.
2009 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருதைப் பெறவுள்ளார்.
தமிழ் நேயம் இதழை மிகுந்த சிரமத்திற்கிடையிலும் கொண்டு வருகிறார். தமிழ் எவ்வளவு இடையூறுகள்
வரினும் தன்னைத் தக்கவத்துத் தழைத்துக் கொள்ளும் என்பதற்கு ஞானி ஐயா போன்றவர்களே சான்று.
No comments:
Post a Comment