Friday, April 23, 2010

அண்மையில் வாசித்த கீற்றுகளில் சில‌

1. சங்கக் கவிதைகள், நவீன கவிதைகள் புரியவில்லை என்கிற நண்பர்களுக்கு
...ஒரு நூலின் தன்மையை அறிதற்குரிய நன்முறை அந்நூலை நேரில் படித்தலேயாகும். இத்தகைய
கட்டுரைகளெல்லாம் நூல்களைப் படித்தற்கு உதவும் தோற்றுவாய்களேயாகும்.
இக்கட்டுரைகளையும், காப்பியங்களின் சாரமாக உரை நடையில் எழுதப்படும் சிறிய நூல்களையும்
படித்த மாத்திரத்தில் மூல நூல்களையே ஆராய்ந்து தேர்ந்துவிட்டதாக மயங்குதல் கூடாது.
எல்லாவற்றையும் எளிதாகவும் விரைவாகவும் அடைந்துவிடவேண்டுமென்ற விருப்பு இக்காலத்தில்
எங்கும் பரவி இருக்கின்றது . வானவூர்தியிலேறி அமர்ந்து மணிக்கு நூறு இரு நூறு கல் விரைவில்
பல்லாயிரங்கல்களுக்கப்பாலுள்ள வேறிடங்களுக்குச் செல்லலாம். இது விஞ்ஞானம் அளித்த நலன்.
ஆனால் வானவூர்தி வேகத்தில் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களையும் இருபத்து ஏழு இயல்களையும்
படித்து முடித்திட ஒல்லுமோ? நம் முன்னோர் எங்ஙனம் முயன்று முறையாக நூல்களைக் கற்றனரோ அங்ஙனமேதான்
நாமும் கற்றல் வேண்டும். ஆதலின் தமிழ்ப்பற்றுகொண்டு அதனைக் கற்கப் புகும் இளந்தமிழன்பர்கள் சிறிய
உரைநடை நூல்களையும் கட்டுரைகளையும் படித்தனராயின் அதன்பின்னர் முதல் நூல்களையும் அவற்றின்
உரைநடைகளோடு படித்தல் வேண்டும்.
...பத்துப் பாட்டுச் சொற்பொழிவுகள் (1952‍‍‍ ‍ கழகப் பதிப்பு ‍ நன்றி ) எனும் நூலில் மதுரைக் காஞ்சி எனும்
கட்டுரையிலிருந்து.. பக்கம் .௧௭௪
ஆசிரியர்: வித்துவான். ஆ. ஜெபரத்னம் , எம். ஏ.,

No comments: